உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

யானை தாக்கி ஒருவர் உ*யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 40 நிமிடங்கள் முன்
102 பார்வைகள்

கொடவெஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ குளத்திற்கு அருகில் காட்டுயானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாகக் கொடவெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெல்லகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய வயோதிபர் ஒருவரே இத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபர் இரவு நேரத்தில் குள பகுதிக்குச் சென்ற போது வீதியில் நின்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அதன் பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் கோட்டவெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக நாளை மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றம்…

85 0 0
இலங்கை செய்திகள்

கைக்குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மீட்பு.!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட…

103 0 0
இலங்கை செய்திகள்

பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு; பயணிகள் விசனம்.!

அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமான அக்கரைப்பற்று மத்திய பேருந்து நிலையம் உரிய முறையில் துப்புரவு செய்யப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக பயணிகளும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர். பேருந்து…

115 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துகளை அவசரமாக வழங்குமாறு கோரிக்கை.!

கொழும்பு – ஹட்டன் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஹட்டன் டிப்போவிற்கு புதிதாக வரவழைக்கப்பட்ட பேருந்துகளை அவசரமாக ஒதுக்கி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் ஹட்டன்…

102 0 0