உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

இலஞ்சம் வழங்கியவரைக் கைது செய்த பின்பே பெற்றவரைக் கைது செய்திருக்க வேண்டுமாம்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
95 பார்வைகள்

அநுர அரசு நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்ததன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் கூட்டத்துக்குப் பலத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முதலில் இலஞ்சம் வழங்கியவரைக் கைது செய்த பின்னரே இலஞ்சம் பெற்றவரைக் கைது செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்புப் பணியாள் தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்ஷ தவறு செய்திருந்தால் அவரைச் சிறைப்படுத்துவதில் தவறு இல்லை; ஆனால், கைது செய்திருக்கும் முறை முற்றாகப் பிழையானது. நிமல் பெரேரா என்ற நபர் மோசடிகளைச் செய்துவிட்டு நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரமே நாமல் ராஜபக்ஷவை ஆணைக்குழு கைது செய்துள்ளது. இலஞ்சம் வழங்குவதும் பெறுவதும் தவறு என்பதால், விசாரணை ஆணைக்குழு முதலில் இலஞ்சம் வழங்கியவரைக் கைது செய்திருக்க வேண்டும்.

இந்த அரசின் நடவடிக்கை காரணமாக நாமல் ராஜபக்ஷவின் கைது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் கூட்டத்துக்குப் பெரும் பலத்தை வழங்கியுள்ளது. ஆனால், கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவின்போது அரசு எங்களுக்கு இத்தகைய பலத்தை வழங்கவில்லை. என்னைச் சிறையில் அடைத்திருந்தால் எமது கூட்டத்துக்கும் இன்னும் அதிகமான மக்கள் வந்திருப்பார்கள்.

வெளிநாட்டுடன் கடன் இல்லாமல் 3 நெடுஞ்சாலைகளை அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததை நாங்கள் வரவேற்கின்றோம். எனினும், அவ்வாறு நெடுஞ்சாலைகள் அமைக்கும்போது அதற்குத் தேவையான மூலப்பொருட்களை டொலர் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைகள் அமைக்கும் தரகுப் பணம் பெலவத்தையில் உள்ள ‘ரில்வின் சில்வா பிரைவட் லிமிடெட்’ நிறுவனத்துக்கே செல்லும். இன்று அதிக பணம் அந்த நிறுவனத்தில் இருக்கின்றது.

அர்ஜுன் மகேந்திரனைச் சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு அழைத்து வருவதாகத் தெரிவித்த இந்த அரசு, அவரை ஒருபோதும் நாட்டுக்குக் கொண்டுவரப் போவதில்லை. மத்திய வங்கி மோசடி செய்த அர்ஜுன் மகேந்திரன் வெளிநாட்டுக்குத் தப்பியோட அரசிலுள்ள பிரதான நிறுவனம் ஒன்றின் பிரதானியே கடவுச்சீட்டை வழங்கி முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதனால் இந்த அரசு வீழ்த்தப்பட்டால், அர்ஜுன் மகேந்திரனுக்குக் கடவுச்சீட்டுத் தயாரித்துக் கொடுத்த அந்த அதிகாரிக்கே முதலாவது வழக்கு தொடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு.!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு வடமாகாண வீதிப்பயணிகள்…

121 0 0
இலங்கை செய்திகள்

வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி.!

சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு ( IMSESO) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில்…

80 0 0
இலங்கை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

152 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைதுக்கான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை.!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் எவையும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

128 0 0