உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

கமரூனில் துப்பாக்கி முனையில் 5 ஆசிரியர்கள் கடத்தல்!

உலக செய்திகள் 4 மணி நேரம் முன்
117 பார்வைகள்

கமரூனின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையம் மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐந்து ஆசிரியர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

வூம் (Wum) நகரில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் குறித்து அந்தப் பிராந்தியத்தின் ஆளுநர் அடோல்ப் லெலே லாஃப்ரிக் (Adolphe Lele Lafrique) உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தப்பியோடிய தாக்குதாரிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை காலை பயிற்சி மையத்திற்குள் நுழைந்த ஆயுதக் குழுவினரைத் தடுத்திட முயன்ற காவல்துறை அதிகாரி மீது தாக்குதாரிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் காவல்துறை அதிகாரியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, அங்கிருந்த ஐந்து ஆசிரியர்களை ஆயுதக் கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளது.

கெமரூனின் ஆங்கில மொழி பேசும் பிராந்தியங்களில் கல்வி ஆண்டை சீர்குலைக்கும் நோக்கில் பிரிவினைவாத குழுக்கள் முடக்கம் அறிவித்துள்ள சூழலில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

கெமரூனின் ஆங்கில மொழி பேசும் பகுதிகளில் அரச படைகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடந்த பத்தாண்டுகளாக மோதல்கள் நிலவி வரும் நிலையில், இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம்!

அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

114 0 0
உலக செய்திகள்

உக்ரைன், மால்டோவா எல்லையில் ஆளில்லாத வானூர்தித் தாக்குதல் : இருவர் பலி!

உக்ரைன் மற்றும் மால்டோவா எல்லைக் கடக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள ஸ்டாரோகோசாச்சே (Starokozache)…

128 0 0
உலக செய்திகள்

சிரியாவில் ஆயுதக் கிடங்கொன்றில் வெடிப்பு: 14 பேர் பலி!

சிரியாவின் இட்லிப் (Idlib) மாகாணத்தில் உள்ள ஆயுதக் கிடங்கொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணம்…

122 0 0
உலக செய்திகள்

பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு!

பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் 600 ஆண்டுகளாக மனிதத் தொடுகைக்கு உட்படாத பழமையான கல்லறை ஒன்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சான் சான் (Chan Chan) நகருக்கு…

94 0 0