சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு!
உலகின் மிக அதிக வேதனம் பெறும் அரசியல் தலைவரான சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கான ஆண்டுச் வேதனத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி, பிரதமர் லோரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் $2.2 மில்லியனிலிருந்து $3.6 மில்லியனாக (சுமார் கூ2.8 மில்லியன் அமெரிக்க டொலர்) 64% உயர்கிறது.
எனினும், இந்த உயர்த்தப்பட்ட கூடுதல் தொகையை ($1.1 மில்லியன் அமெரிக்க டொலர்) தொண்டு நிறுவனங்களுக்குஇ அடுத்த 5 ஆண்டுகளுக்கான நன்கொடையாக வழங்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
எனினும் சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நிலவும் சூழலில்இ இந்த வேதன உயர்வு பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.