காசா மக்களை வெளியேற்றும் திட்டம்
காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் முன்வைத்துள்ளார்.
முதல் ஆண்டில் 2.5 லட்சம் பேரும், அடுத்த ஆறு ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் பேரும் வெளியேற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியர்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்வது சர்வதேச சட்டத்தின்படி போர்க்குற்றமாகக் கருதப்படலாம் என்பதால், அவரது கருத்துக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.