உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

இலங்கை செய்திகள் 47 நிமிடங்கள் முன்
30 பார்வைகள்


பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை, புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

புதிய திட்டத்தின் கீழ், விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியும்.

விவசாயிகள் காப்புறுதி செய்யப்படும் அடிப்படைத் தொகையின் 7 சதவீதத்திற்கு சமமான பிரீமியம் தொகையை செலுத்துவதன் மூலம் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இயற்கை அனர்த்தங்கள், நோய்கள், பூச்சிகள் மற்றும் தீங்குயிரிகளால் ஏற்படும் பயிர் சேதங்கள், அத்துடன் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களும் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்றன.

பயிர்களுக்கு சேதம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், ஒரு ஏக்கருக்கு ரூ.300,000 முதல் ரூ.400,000 வரை இழப்பீடு பெற்றுக்கொள்ள விவசாயிகள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

விவசாயிகள் எதிர்கொள்ளும் விவசாய அபாயங்களை நிர்வகிக்க உதவுவதுடன், அவர்கள் தொடர்ந்து பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதையும் ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என சபை மேலும் தெரிவித்துள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்…

47 0 0
இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

38 0 0
இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

20 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

49 0 0