உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

இலங்கை செய்திகள் 30 நிமிடங்கள் முன்
18 பார்வைகள்

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

34 வயதான குறித்த சந்தேகநபர், தேசிய மக்கள் சக்தியின் கீழ் கேகாலை மாநகர சபையின் ஓலகம பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று காலை சுமார் 10.25 மணியளவில் கேகாலை–யட்டோகொட பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், சந்தேகநபர் நேற்று பிற்பகல் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது வழக்கை செப்டெம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் நாலக வீரசிங்க, சந்தேகநபரை அன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கண்டியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கேகாலை–தீவெல வீதியில் மினுவாங்கமுவ பகுதியில் அமைந்துள்ள காணியில் கபானா திட்டமொன்றை அபிவிருத்தி செய்வதாகக் கூறி குறித்த நகர சபை உறுப்பினர் தம்மிடமிருந்து 26 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றதாக வர்த்தகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த திட்டம் ஒருபோதும் நிர்மாணிக்கப்படவில்லை எனவும், அதற்காகப் பெறப்பட்ட பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகர் முதலில் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து கேகாலை பொலிஸார் ‘பி’ அறிக்கையொன்றின் மூலம் கேகாலை நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கை அறிக்கையிட்டனர்.

பின்னர், விசாரணைகள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன், அந்தப் பிரிவினரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.

விசாரணைகளின்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

33 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

48 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

68 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

33 0 0