உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரி.!

குற்றம் 2 வாரங்கள் முன்
192 பார்வைகள்

யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த டானியல் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்தவகையில், இவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதுடன் இவரது மனைவி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வதுடன் அவர்களது தொலைபேசி இலக்கங்களைப் பெற்று, அழைப்புகளை மேற்கொண்டு தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவங்களால் பல பெண் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தை விட்டு விலகி, வேறு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு இடமாற்றம் பெற்று செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவரது செயல்களுக்கு இவரது மனைவி உடந்தையாக இருப்பதாகவும் இதனால் இவர்கள் இவரும் அடிக்கடி இடமாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இவர்களது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

குற்றம்

பொலிஸாரை திணறவிடும் போ*ப்பொருள் வியாபாரி; நடவடிக்கை கோரும் மக்கள்.!

முல்லைத்தீவு தெற்கு, கள்ளப்பாடு, மில்டன் கடையடியில் வசித்து வரும் பௌசிகா எனப்படும் நேமிநாதன் கீர்த்தனா மற்றும் அவரது கணவர் நேமிநாதன் ஆகியோர் ஜஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை…

135 0 0
குற்றம்

பாரிய கொள்ளை மற்றும் போ*ப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும்; நபர் மக்களே அவதானம்!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் வசித்து வருபவருமான துரைசிங்கம் துர்ஷிகன் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர்…

176 1 0
குற்றம்

பாரிய பொய் வழக்கு மற்றும் மோசடி செயல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்.!

வவுனியாவைச் சேர்ந்தவரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான நவநீதன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் மணல் கடத்தல்,…

118 0 0
குற்றம்

பிரபல தொலைக்காட்சி ஊடகவியாளர் ஐ*ஸ் போ*தைப் பொருள் வியாபாரம்; பரபரப்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் கபிலன் என்பவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் நீண்டகாலமாக ஐஸ்…

114 0 0