உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பொலிஸாரை திணறவிடும் போ*ப்பொருள் வியாபாரி; நடவடிக்கை கோரும் மக்கள்.!

குற்றம் 23 மணி நேரம் முன்
135 பார்வைகள்

முல்லைத்தீவு தெற்கு, கள்ளப்பாடு, மில்டன் கடையடியில் வசித்து வரும் பௌசிகா எனப்படும் நேமிநாதன் கீர்த்தனா மற்றும் அவரது கணவர் நேமிநாதன் ஆகியோர் ஜஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

நேமிநாதன் என்பவர் தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், சிறைச்சாலையில் இருந்து ஜஸ் போதைப்பொருளை பயன்படுத்தியதன் காரணமாக அவரது தண்டனைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சனா என்பவர் இவர்களுடன் இணைந்து போதை மாத்திரைகள், ஹெரோயின், ஜஸ் உட்பட பல போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி, குமரேசு மற்றும் அவரது மனைவி சிந்துஜா ஆகியோரும் குறித்த போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்களுக்கு பொலிஸ் அதிகாரிகள் மூலம் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இவர்களது இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உயரதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

குற்றம்

பாரிய கொள்ளை மற்றும் போ*ப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும்; நபர் மக்களே அவதானம்!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் வசித்து வருபவருமான துரைசிங்கம் துர்ஷிகன் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர்…

174 1 0
குற்றம்

பாரிய பொய் வழக்கு மற்றும் மோசடி செயல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்.!

வவுனியாவைச் சேர்ந்தவரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான நவநீதன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் மணல் கடத்தல்,…

118 0 0
குற்றம்

பிரபல தொலைக்காட்சி ஊடகவியாளர் ஐ*ஸ் போ*தைப் பொருள் வியாபாரம்; பரபரப்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் கபிலன் என்பவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் நீண்டகாலமாக ஐஸ்…

113 0 0
குற்றம்

பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரி.!

யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த டானியல் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதுடன் இவரது மனைவி முல்லைத்தீவு…

190 0 0