உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பாரிய கொள்ளை மற்றும் போ*ப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும்; நபர் மக்களே அவதானம்!

குற்றம் 1 நாள் முன்
175 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் வசித்து வருபவருமான துரைசிங்கம் துர்ஷிகன் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்தவகையில், இவர் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக தங்கப் பொருட்களை வாங்கி விற்பனை செய்தல், கடத்துதல் மற்றும் சட்டவிரோதமாக காணி கையகப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பல பகுதிகளுக்கு உந்துருளியில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

அத்துடன், இவர் சிலருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கி அவர்களை திருட்டுச் செயல்களில் ஈடுபடுத்தி அந்த நகைகளை விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நல்லூர் திருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் இவ்வாறான திருட்டு நடவடிக்கைகளுக்கு சிலரை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இவர் கோயில் காணி தொடர்பாக போலியான ஆவணங்கள் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த சில அதிகாரிகள் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், கடந்த காலங்களில் கள்ளநகை தொடர்பான சம்பவங்களில் இருந்து தப்புவதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம் வழங்கி வழக்குகளில் இருந்து தப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

எனவே, இவரது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பிலும் இவருக்கு உடந்தையாக செயற்படும் அதிகாரிகள் தொடர்பிலும் உயரதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

குற்றம்

பொலிஸாரை திணறவிடும் போ*ப்பொருள் வியாபாரி; நடவடிக்கை கோரும் மக்கள்.!

முல்லைத்தீவு தெற்கு, கள்ளப்பாடு, மில்டன் கடையடியில் வசித்து வரும் பௌசிகா எனப்படும் நேமிநாதன் கீர்த்தனா மற்றும் அவரது கணவர் நேமிநாதன் ஆகியோர் ஜஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை…

135 0 0
குற்றம்

பாரிய பொய் வழக்கு மற்றும் மோசடி செயல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்.!

வவுனியாவைச் சேர்ந்தவரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான நவநீதன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் மணல் கடத்தல்,…

118 0 0
குற்றம்

பிரபல தொலைக்காட்சி ஊடகவியாளர் ஐ*ஸ் போ*தைப் பொருள் வியாபாரம்; பரபரப்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் கபிலன் என்பவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் நீண்டகாலமாக ஐஸ்…

113 0 0
குற்றம்

பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரி.!

யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த டானியல் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதுடன் இவரது மனைவி முல்லைத்தீவு…

190 0 0