உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
77 பார்வைகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த கோரிக்கைக்கு, மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரிகளும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் இணங்கினர்.

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (19) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கவலைகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில், அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.

அதேவேளை, அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரப்பினரின் கௌரவமும் தொழில்சார் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத் துவமும் கலந்துரையாடலில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத சூழ்நிலைகள் மீண்டும் தோன்றாத வகையில், பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவற்றை உரிய கலந்துரையாடல் ஊடாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

‘இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாத வகையில் இருதரப்பினரும் உறுதியுடன் செயல்பட வேண்டும்’ என அவர் வலியுறுத்தியதுடன், இதை கலந்துரையாடலில் பங்கேற்ற இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

மக்களின் நலனையும் மாகாணத்தின் அபிவிருத்தி முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி, கருத்து வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் எனவும், இதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், கல்வி, உள்ளூராட்சி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஐந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

85 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

68 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடைக்குத் தீர்வு

யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். இந்த…

71 0 0