உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பரீட்சார்த்திகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனர்த்த முகாமைத்துவ மையம் நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
65 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் பரீட்சைகளின் போது அசம்பாவிதங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் தேவையான உத்தியோகத்தர்களுடன், நிவாரண உபகரணங்களும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

நிலவும் காலநிலை நிலவரத்திற்கு மத்தியில் எதிர்வரும் மூன்று நாட்களும் மிகவும் தீர்மானமிக்கவை என அனர்த்த முகாமைத்துவ மையத்தின் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கான பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் மற்றும் போக்குவரத்து வழிகளை தடையின்றி பேணுவதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் பெருக்கு காரணமாக பரீட்சை மையங்களுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், படகுகள் மற்றும் விசேட பாதுகாப்பு வாகனங்கள் மூலம் மாணவர்களைப் பாதுகாப்பாக பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்துச் செல்ல விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கு அல்லது மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பரீட்சார்த்திகள் ஏதேனும் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117, பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கம் அல்லது 011 2136136, 011 2136222, 011 2136223 ஆகிய விசேட தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

53 0 0