உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நீர்கொழும்பு சிறை வன்முறை அறிக்கை அநுரவிடம் சமர்ப்பிப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
46 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார இந்தத் தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த மாதம் 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதலில் 22 கைதிகளும், 10 அதிகாரிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் 21 அதிகாரிகள் மற்றும் 106 கைதிகள் படுகாயமடைந்தனர்.

மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுவிட்டன. எனினும், பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட கூடுதல் சாத்தியமான நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவே விசேட ஜனாதிபதி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் ஊடாக உயிரிழந்த மற்றும் காயமடைந்த அதிகாரிகளுக்கான இழப்பீடு, ஓய்வூதியம் வழங்குதல், அவர்கள் பெற்ற கடன்கள் தொடர்பில் தீர்வு காணுதல் மற்றும் காயமடைந்தவர்களின் முழுமையான இயலாமை நிலை குறித்து விசாரித்துத் தகுந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

53 0 0