கொழும்பு மெகசின் மற்றும் இரத்தினபுரி குறுவிட்ட சிறைச்சாலைகளில் பதற்றம்!
கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் ‘ஈ’ (E) பிரிவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
சுமார் 40 பேர் கொண்ட குழுவினருக்கிடையில் இந்த மோதல் மற்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தையடுத்து, சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக, நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவிக்கின்றார்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.