உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இயந்திரக் கோளாறால் இலங்கைக் கடற்பரப்பில் தவித்த 11 இந்திய மீனவர்கள் கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
71 பார்வைகள்

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்ட படகில் இருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற குறித்த படகு, இயந்திரக் கோளாறு காரணமாக நெடுந்தீவு குயின் ரவஸ் பகுதிக்கு அருகில் உள்ள கலப் பகுதிக்குள் அகப்பட்டுள்ளது. இதனால் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் உதவி கோரியுள்ளனர்.

எனினும், கடல் வற்றுப்புக் காணப்பட்டதனால் கடற்படையினரின் படகுகளோ அல்லது ஏனைய மீன்பிடிப் படகுகளோ குறித்த பகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கடற்படையினர் அந்தப் படகுக்குச் சென்று, அங்கிருந்த மீனவர்களைக் கடலில் இறக்கி பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட 11 இந்திய மீனவர்களும் தற்போது கடற்படையினரின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், நெடுந்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பொலிஸாரால் அவர்கள் நாளை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

47 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

53 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

72 0 0