உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பல கோடி ஏமாற்றிய போலி முகவர்; மக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

குற்றம் 2 வாரங்கள் முன்
94 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்பு பகுதியில் திருவள்ளுவர் வீதியில் வசித்து வந்த பிரான்சிஸ் ஜெயந்தன் என்பவரும் அவரது மனைவியும் சேர்ந்து வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பலரிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்தவகையில், இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா முப்பது இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு போலியான விசாவினை வழங்கி தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இவருக்கு எதிராக அம்பாறை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

எனினும், இவர் தலைமறைவாகியுள்ளதால் இவரை கைது செய்ய பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

எனவே, குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது தினகரனுக்கோ உடனடியாக அறிவிக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

குற்றம்

பொலிஸாரை திணறவிடும் போ*ப்பொருள் வியாபாரி; நடவடிக்கை கோரும் மக்கள்.!

முல்லைத்தீவு தெற்கு, கள்ளப்பாடு, மில்டன் கடையடியில் வசித்து வரும் பௌசிகா எனப்படும் நேமிநாதன் கீர்த்தனா மற்றும் அவரது கணவர் நேமிநாதன் ஆகியோர் ஜஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை…

135 0 0
குற்றம்

பாரிய கொள்ளை மற்றும் போ*ப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும்; நபர் மக்களே அவதானம்!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் வசித்து வருபவருமான துரைசிங்கம் துர்ஷிகன் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர்…

176 1 0
குற்றம்

பாரிய பொய் வழக்கு மற்றும் மோசடி செயல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்.!

வவுனியாவைச் சேர்ந்தவரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான நவநீதன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் மணல் கடத்தல்,…

119 0 0
குற்றம்

பிரபல தொலைக்காட்சி ஊடகவியாளர் ஐ*ஸ் போ*தைப் பொருள் வியாபாரம்; பரபரப்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் கபிலன் என்பவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் நீண்டகாலமாக ஐஸ்…

115 0 0