உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

யாழ். இந்துவின் அடையாளங்கள் அதிபரால் அகற்றப்படுகின்றன; மக்கள் விசனம்.!

குற்றம் 3 வாரங்கள் முன்
503 பார்வைகள்

யாழ்ப்பாணம் இந்து பாரம்பரியங்களில் ஒன்றாக விளங்கும் யாழ் இந்துக் கல்லூரியில் காணப்பட்ட சரஸ்வதி சிலை மற்றும் நந்தி என்பன பாடசாலை நிர்வாகத்தால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல தசாப்தங்களாக யாழ்ப்பாண இந்துக்களின் தொன்மையை பறைசாற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மேற்குறித்த சம்பவத்தினால் பல இந்து மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கல்லூரி சைவ பாரம்பரியங்களை கொண்ட பாடசாலையாக காணப்படுகின்ற நிலையில் செந்தில்மாறனின் விசர்த்தனமான செயற்பாட்டினால் இவ்வளவு காலமும் கட்டிக்காத்து வந்த சைவ பாரம்பரியம் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிபர் வகுப்பறைகளில் காணப்பட்ட சுவாமி படங்களை நீக்குமாறு பணித்ததும் உறுதிப்படுத்தப்பட்ட மட்டங்களில் இருந்து அறியக் கிடைக்கிறது.

இதே அதிபர் சில நாட்களுக்கு முன்பு யாழ் இந்துக் கல்லூரியில் காணப்பட்ட சிவலிங்கத்தினை அது இருந்த இடத்தில் இருந்து அகற்றி ஏற்கனவே பாடசாலையில் இருக்கும் கோவிலுக்கு வெளியே அனாதரவாக வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

குறித்த அதிபர் தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டு நெற்றியில் திருநீறு கூட வைப்பதில்லை. இவர் போன்ற நாத்திகவாதிகளை யாழ் இந்துக் கல்லூரிக்கு அதிபராக நியமித்ததே திட்டமிட்ட சதிச்செயல் என நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவரது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

குற்றம்

பொலிஸாரை திணறவிடும் போ*ப்பொருள் வியாபாரி; நடவடிக்கை கோரும் மக்கள்.!

முல்லைத்தீவு தெற்கு, கள்ளப்பாடு, மில்டன் கடையடியில் வசித்து வரும் பௌசிகா எனப்படும் நேமிநாதன் கீர்த்தனா மற்றும் அவரது கணவர் நேமிநாதன் ஆகியோர் ஜஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை…

142 0 0
குற்றம்

பாரிய கொள்ளை மற்றும் போ*ப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும்; நபர் மக்களே அவதானம்!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் வசித்து வருபவருமான துரைசிங்கம் துர்ஷிகன் என்பவர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர்…

188 1 0
குற்றம்

பாரிய பொய் வழக்கு மற்றும் மோசடி செயல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்.!

வவுனியாவைச் சேர்ந்தவரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான நவநீதன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் மணல் கடத்தல்,…

121 0 0
குற்றம்

பிரபல தொலைக்காட்சி ஊடகவியாளர் ஐ*ஸ் போ*தைப் பொருள் வியாபாரம்; பரபரப்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் கபிலன் என்பவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில், இவர் நீண்டகாலமாக ஐஸ்…

117 0 0