உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பிலிப்பைன்ஸில் இலங்கை, இந்திய, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
62 பார்வைகள்

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெற்றுவரும் 33 ஆவது ஆசியான் பிராந்தியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்புத் தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிராந்திய அளவிலான இந்த முக்கிய மாநாட்டின்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய – பசிபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில், பிராந்திய பாதுகாப்பு, கூட்டுறவு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் தொடர்பில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இன்றும், நாளையும் நடைபெறவுள்ள 33 ஆவது ஆசிய பிராந்திய கூட்டமைப்பு மாநாடு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நட்பு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்தின் 50 ஆவது ஆண்டு விழா ஆகிய இரண்டிலும் அமைச்சர் விஜித ஹேரத் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஆசியான் அமைப்பின் பொதுச்செயலாளர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்து அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரச் செயலாளர் மா. தெரேசா பி. லசாரோவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், இப்பயணத்தின் ஒரு பகுதியாகப் பிலிப்பைன்ஸின் மண்டனாவோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் கௌரவத் தூதரக அலுவலகத்தையும் அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், நிவாரணம் வழங்குவதானது…

28 0 0
இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

58 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0