கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட போது சம்பவம்!
கட்டுநாயக்க – தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, அதனைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.