உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

AI அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் – பிரித்தானிய மத்திய வங்கி வலியுறுத்தல்!

உலக செய்திகள் 18 மணி நேரம் முன்
66 பார்வைகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களை முறியடிக்க, சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என பிரித்தானிய மத்திய வங்கியின் ஆளுநர் அன்ட்ரூ பெய்லி (Andrew Bailey) வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவால் தனித்துச் செயற்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்கவுள்ள நிலையில், தற்போதைய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves), மத்திய கிழக்கு மோதல்களால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து எச்சரித்துள்ளார்.

அத்துடன், மனித மூளைக்கு நிகரான AI தொழில்நுட்பம் இன்னும் சில ஆண்டுகளில் உருவாகலாம் என்பதால், அதனைக் கண்காணிக்க உலகளாவிய கண்காணிப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind) அமைப்பின் நிறுவனர் டெமிஸ் ஹஸாபிஸ் (Demis Hassabis) கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பிரித்தானியாவில் இரவு நேரங்களில் பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடை!

ஐக்கிய இராச்சியம், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்…

83 0 0
உலக செய்திகள்

கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சிக்கியது நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள்!

கனடாவின் மனிட்டோபா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கி மார்க் (78) என்பவரின் வீட்டில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும்…

89 0 0
உலக செய்திகள்

பிரித்தானியாவில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ ஆதரவளித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ (IRGC) பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு குழுவாக அறிவிக்கப்படும் என்றும், அதற்கு ஆதரவு வழங்குவது முற்றாகத் தடை செய்யப்படுவதாகவும்…

102 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறைக்கு முடிவு!

அமெரிக்காவில் 1960ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள, வருடத்தில் இருமுறை கடிகார நேரத்தை மாற்றியமைக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பகல்நேர சேமிப்பு நேரத்தை (Daylight Saving Time)…

76 0 0