மணிவண்ணன் நினைவுக் கிண்ணத்தை தனதாக்கிய தியோகுநகர் அலைகள் விளையாட்டுக்கழகம்.!
முள்ளியவளை – நாவல்காடு, ஐயங்கரன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அமரர் மணிவண்ணன் நினைவுக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி ஐங்கரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
ஐயங்கரன் விளையாட்டுக்கழகத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
அந்தவகையில் குறித்த கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக அணியும், தியோகுநகர் அலைகள் விளையாட்டுக்கழக அணியும் மோதின.
குறித்த போட்டியில் தியோகுநகர் அலைகள் விளையாட்டுக்கழக அணியினர் வெற்றியீட்டி அமரர் மணிவண்ணன் நினைவுக் கிண்ணத்தினை தமதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.










