உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!

131 பார்வைகள்

மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக அந்த கிராம மக்களிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் குறித்த செய்தியை தனது நிறுவனத்திற்கு அனுப்பியிருந்த நிலையில் அந்த செய்தி குறித்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று கூறி குறித்த தொலைக்காட்சி ஊடகவியலாளருக்கு எதிராக ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன் கையெழுத்து திரட்டி வருவதுடன், குறித்த ஊடகவியலாளரை தொலைபேசியில் அச்சுறுத்தியும் உள்ளார்.

நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் நிலையில் எல்லா செய்திகளையும் தொலைக்காட்சி நிறுவனங்களால் ஒளிபரப்பு செய்ய முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத நகரச சபை உறுப்பினர் அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து திரட்டி வருவது குறித்து ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தங்களுக்கு ஏற்றால் போல் நடக்கவேண்டும் என்று நினைக்கும் அரசியல் வாதிகளால் தான் ஊடகவியலாளர்கள் கூடுதலான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இது குறித்து ஊடக நிறுவனங்களுக்கு புகாரளிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

49 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக,…

47 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

74 0 0
இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாத உயர்தர விண்ணப்பதாரர்களுக்கு புதிய நடைமுறை!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் , தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய…

60 0 0