துப்பாக்கியுடன் கைதான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியொன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலாங்கொடை பிரதேசசபை உறுப்பினரை, எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டது.
சந்தேகநபரான பிரதேசபை சபை உறுப்பினர் நேற்று பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, பலப்பிட்டிய நீதிவான் பவித்ரா சஞ்சீவனி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சந்தேகநபரிடமிருந்து ‘ரிப்பீட்டர்’ ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதை அடுத்து, சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 11ஆம் திகதி காலி குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நேற்றைய தினம் மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்ப்பனங்களையும் பரிசீலித்த நீதிவான் சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.