இன்று மாலை அரச மரியாதையுடன் விடைபெறுகிறார் இசைக்குயில்!
பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் இன்று (12) காலை அவரது இல்லத்திலிருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்திற்கு எடுத்துச் செல்லபட்டுள்ளது.
அங்கு பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4.00 மணியளவில் மைசூரில் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக நேற்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார்.
இவர் நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.