உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

3 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் டெங்கு நிலைமை, டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன், மாவட்ட தொற்றுநோய் பிரிவு வைத்தியர் ம.ஜெயராசா சுகாதார வைத்திய அதிகாரிகள், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸார் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது. மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் அவர்கள் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் குறைந்த அளவு காணப்பட்டிருந்த போதிலும் முன் எச்சரிக்கையாக சுற்றுச்சூழல் மற்றும் பொது இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் 13-ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்கள் அனைத்திலும் வைத்தியசாலை, அரச சார்பற்ற திணைக்களங்கள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள், பிரதான வீதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

15 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

20 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

18 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

18 1 0