உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற போசணை மாத கண்காட்சி.!

1 பார்வைகள்

போசணை மாதத்தையொட்டி மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏற்பாடு செய்த தேசிய போசணை மாத கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (9) காலை மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரி.ஒஸ்மன் டெனி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத் கலந்து கொண்டார்.

இதன்போது ‘சிற்றுண்டிகளை பற்றி மீளச் சிந்திப்போம் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பாரம்பரிய சிற்றுண்டிகளை தெரிவு செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்தும், கையடக்க தொலைபேசியினால் ஏற்படும் சாதக பாதக நிலை குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது விழிப்புணர்வு நிகழ்வும் போசணை கண்காட்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

2 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

6 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

7 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

5 0 0