உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

போதை ஓர் சமூகச் சீர்கேடு எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கவியரங்கு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
2 பார்வைகள்

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவிஞர்கள் கவிபாடும் சிறப்பு கவியரங்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(07) மாலை இடம்பெற்றது.

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில், ‘வத்ஸர பியவர’ எனும் கலாச்சார வேலைத்திட்டத்தில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கலாச்சார உத்தியோகத்தர் றஸ்மி மூசாவின் நெறிப்படுத்தலில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான் தலைமையில் இடம்பெற்ற இக்கவியரங்கில் சாய்ந்தமருதில் உள்ள பிரபல சிரேஷ்ட மற்றும் இளம் கவிஞர்கள், கவிதாயினிகள் கவிதை பாடினர்.

‘போதை ஓர் சமூகச் சீர்கேடு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கவியரங்கில், யூ.எல். ஆதம்பாவா, எம்.ஏ.சி. சித்தி ஜெஸீனா, ஏ.எச். சுபையில் அஸீஸ், எம்.ஏ.சி.எம். பாயிஸ் கரீம், எம்.ஆர். ஐகிபானு, யூ.எல். நூறுல் ஹுதா, எம்.ஏ.சி. சாஹிர் கரீம், என்.எம். அலிக்கான், எம்.சி. றிஹானா பேகம், எம்.ஐ. நளீம், அஸ்வான் சக்காப் மௌலானா, எம்.ஐ.எம். அஷ்ரப் ஆகியோர் சிறப்பான முறையில் கவிதை பாடியதோடு, இதற்கு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும் ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ. பீர்முகமது நடுவராக மத்தியஸ்தம் வகித்து சிறப்பாக வழி நடாத்தினார்.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்ஸான், சமுர்த்தி தலைமைப்பீட உத்தியோகத்தர் ஏ.சி.ஏ. நஜீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி.முஹம்மட், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ். நளீர், கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.எம். தௌபீக், முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் யூ.எல். முஹம்மட் றிபாஜ், சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஸாத், பிரதேச கலாச்சார அதிகார சபையின் தலைவர், பிரதித்தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியாக கவிபாடிய அனைவரும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

17 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

24 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

19 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

20 1 0