உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழந்த அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அஞ்சலி.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
3 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறையின் போது, தங்களது கடமையைச் செய்ய முற்பட்டு மரணமடைந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், உயிரிழந்த அதிகாரிகள் அனைவரும் “தங்களது கடமையை நிறைவேற்றுவதற்காகத் தங்களின் உயிர்களையே தியாகம் செய்த உண்மையான வீரர்கள்” எனப் புகழாரம் சூட்டியுள்ளது.

அத்துடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் திணைக்களத்தின் ஒட்டுமொத்தப் பணியாளர்கள் சார்பாக, உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துக் கொண்டுள்ளது.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர மோதலின் போது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த அதிகாரிகள் கைதிகளின் கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு மரணமடைந்த அதிகாரிகளின் விவரம் வருமாறு,

  • ஜெயிலர் எஸ்.எச்.ஜி. சந்திரவம்ச
  • ஜெயிலர் சாஜன்ட் ஆர்.பி.ஆர். சஞ்சீவ
  • ஜெயிலர் சாஜன்ட் பி.என்.என். தரங்க
  • ஜெயிலர் சாஜன்ட் டி.என்.ஆர். திலகசிறி
  • ஜெயிலர் சாஜன்ட் டி.டபிள்யூ. புஷ்பகுமார
  • ஜெயிலர் சாஜன்ட் எஸ்.டி.எஸ். அபேவர்தன
  • ஜெயிலர் சாஜன்ட் ஏ.டி. தரங்க

நாட்டின் சிறைச்சாலை வரலாற்றில் கடமையின் போது ஒரே தருணத்தில் இத்தனை அதிகாரிகள் உயிரிழந்தமையானது ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களுக்கான இறுதிச் சடங்குகளைப் பூரண திணைக்கள மரியாதையுடன் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது…

17 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்…

24 1 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய…

19 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல்…

20 1 0