• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, July 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்.!

Mathavi by Mathavi
July 7, 2026
in இலங்கை செய்திகள்
0
அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்.!
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசின் நிர்வாகக் குறைபாடுகள், நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மரணங்கள் மற்றும் டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் தோல்விகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

இங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொரட்டுவை தொகுதி அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான சுஜித் புஷ்பகுமார தெரிவித்ததாவது,
“நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் பெரும் கவலையளிக்கின்றது. இன்று ஜனாதிபதியாக இருக்கும் அநுரகுமார திஸாநாயக்க, அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசின் பொறுப்பில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார்.

சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் பாதுகாப்பு அரசின் பொறுப்பாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் இவ்வாறு மரணமடையும் போது அதற்கு யார் பொறுப்பேற்பது? இந்த நிலைமையை ஜனாதிபதி இன்று நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பெருமளவிலான கைதிகள் தற்போதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்களைப் பாதுகாக்குமாறு கோரி பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும்.” – என்றார்.

தொடர்ந்து டெங்கு பரவல் குறித்துப் பேசிய அவர், “நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மொரட்டுவை பகுதியில் இந்த நோய் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறானதொரு ஆபத்தான சூழலிலும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் டெங்கு ஒழிப்பை முன்னிறுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்து இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வரை காத்திருக்காமல், அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.” – என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜா – எல தொகுதியின் அமைப்பாளர் ரங்க கொடிதுவக்கு தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசு டெங்கை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு வெறும் ஊடகக் காட்சிகளை மட்டுமே நடத்தி வருகின்றது. கடந்த காலங்களில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் டெங்கு ஒழிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமாக இறங்கின. ஆனால், தற்போதைய அரசிடம் அதுபோன்ற எந்தவொரு தயார்நிலையோ அல்லது முறையான வேலைத்திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, சிறைச்சாலைகளின் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தி கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு ஆபத்திலிருந்து மக்களை மீட்பதற்கும் அரசு வெறும் விளம்பரங்களை விடுத்து, உடனடியாகத் தலையிட்டு முறையான திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.” – என்றார்.

Related Posts

மன்னாரில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

மன்னாரில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

by selvan
July 7, 2026
0

மன்னாரில் தனியார் நிறுவனம் நடத்திய பயிற்சி நெறிகளை நிறைவு செய்த 60 பெண் பயனாளிகளுக்கும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மனிதாபிமான அபிவிருத்திக்கான...

நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தல்

நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தல்

by selvan
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ள நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சர்வதேச சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தனது பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும்...

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிஸ் தூதருடன் ரெலோ சந்திப்பு

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிஸ் தூதருடன் ரெலோ சந்திப்பு

by selvan
July 7, 2026
0

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிற்சலாந்தின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய சிரி வால்ட் அம்மையாரை சுவிற்சலாந்து தூதரகத்தில் இன்று 07-07-2026 தமிழ்...

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

by Mathavi
July 7, 2026
0

கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவிற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வாழைச்சேனைப் பொலிஸார்...

மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு; கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி.!

மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு; கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; யாழ். சிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றம்.!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; யாழ். சிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றம்.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக்...

நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகளுக்கு 14 உறுப்பினர்கள் எதிர்ப்பு.!

நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகளுக்கு 14 உறுப்பினர்கள் எதிர்ப்பு.!

by Mathavi
July 7, 2026
0

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் அவர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் இன்று (07)...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது.!

by Mathavi
July 7, 2026
0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் கீழ் வரும் ஃபேர்லோன் தேயிலை தோட்டத்தின் சின்ன சூரியகந்த பகுதியில் வசித்து வரும் 62 வயதுடைய நபர் நேற்று மீட்டியாகொட விவசாய நிலப்...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

by Mathavi
July 7, 2026
0

மன்னார் - மடுகல்வி வலயத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சீர்செய்வதற்குரிய, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி