அக்கரைப்பற்று வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகளில் பங்கேற்று, மிகச் சிறப்பான வெற்றிகளைப் பெற்று மாகாண மட்டத்திற்குத் தெரிவாகிய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (06) பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது.
இங்கு, தரம் 10 மாணவி ஏ. எப்.இஸ்ரா முதலாம் இடம் பெற்றார். தரம் 11 மாணவர்களான ஏ.எப். இஹாதா இரண்டாம் இடத்தையும், எம்.ஐ.ஆதில் மூன்றாம் இடத்தையும் பெற்றார்கள்.
அதுபோல், தரம் 09 மாணவன் எம்.ஏ.யூசுப் மிக்தாம் மூன்றாம் இடத்தையும், தரம் 06 மாணவன் எம்.ஏ.அமார் மூன்றாம் இடத்தையும் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இங்கு இம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், அதிபர் மற்றும் வலயத்தலைவர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தனர்.
மாணவர்களைப் போட்டிகளுக்காக அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து, பாடசாலை மட்டத்தில் போட்டிகளை மிகச் சிறப்பாக நடாத்தி, மாணவர்களை வலய மட்டத்திற்கு அழைத்துச் சென்று வழிப்படுத்திய சமூக விஞ்ஞானப் பாட இணைப்பாளர் ஆசிரியர் எம்.எஸ்.எம்.அன்வர் மற்றும் ஏனைய சமூக விஞ்ஞானப் பாட ஆசிரியர்களான, எம்.ஏ.எம்.றிஷாட், எஸ்.அஷ்ரப்கான், ஏ.ஏ.பர்ஸானா, பி.ஏ.மஹ்ஜபீன், ஏ.வி.செரீன்தாஜ், ஐ.முனோபரா, எம்.கே.றிஸ்னா ஆகியோருக்கும் இவர்களுடன் இணைந்து மாணவர்களின் வெற்றிக்குப் பின்னணியில் இருந்து ஊக்கமளித்த அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார், பிரதி அதிபர்களான எம்.ஏ. கமறுந்நிஸா, ஜே.வஹாப்தீன், உதவி அதிபர் எம்.ஐ.பளீலுள்ளா மற்றும் வலயத் தலைவர்களான எம்.சி.எம்.நஸிறுதீன், எம்.எப்.பாசினா, ஏ.ஆர்.எம்.நிஹால், உதவி வலய தலைவர்களான எம்.ஜே.எம்.ஜரீத், ரி.எம்.நெளஸாத் அலி எம்.எல்.எஸ்.முஜீபா என அனைவருக்கும் பாடசாலை சமூகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.















