• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, July 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result

தொழிற்சங்கங்களை ஒடுக்குகின்றது அரசு.!

Mathavi by Mathavi
July 6, 2026
in இலங்கை செய்திகள்
0
Home இலங்கை செய்திகள்
Share on FacebookShare on Twitter

தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தற்போதைய அரசு, தொழிற்சங்கங்களை நசுக்கி அழிக்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்றது என்று சுகாதாரத் தொழில்முறை நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் தொழிற்சங்க உரிமைகள் மீதான அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளையும் நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கில் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் ‘தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம்’ உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் தொழிலாளர் வர்க்கம் இன்று பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. தொழிலாளர்களுக்குரிய உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதுடன், குறைந்தபட்ச சமூக உரையாடல்களுக்கான வாய்ப்புகூட இல்லாத நிலை காணப்படுகின்றது. ஆளும் தரப்பினருடனோ அல்லது அமைச்சர்களுடனோ தொழிற்சங்கங்கள் சுதந்திரமாகக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.

தொழிலாளர் அமைச்சின் ஊடாகச் சில தொழிற்சங்கங்களைச் செயலிழக்கச் செய்வதற்கும், அவற்றுக்குள் திட்டமிட்டுப் பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மற்றொரு புறம், நாட்டில் வாழ்க்கைச் செலவு பாரியளவில் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் பெற்றுவரும் ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் பல்வேறு அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் தொழிற்சங்க கட்டளைச் சட்டம் அமலில் உள்ளதுடன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 87 மற்றும் 88 ஆம் இலக்க உடன்படிக்கைகளும் காணப்படுகின்றன. இவ்வாறான தேசிய மற்றும் சர்வதேச சட்டப் பாதுகாப்புகள் இருக்கின்ற நிலையில், தொழிற்சங்கங்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய ஜனநாயகச் சூழலை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதை விடுத்து அவற்றின் மீது அழுத்தம் செலுத்துவதோ அல்லது தலையீடு செய்வதோ ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தற்போதைய இக்கட்டான நிலைமையைத் தனித்தனியாக எதிர்கொள்வது சாத்தியமற்றது. அதனால்தான், கடந்த 3ஆம் திகதி கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில் அரச, தனியார் மற்றும் அரை அரச துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துச் சுயாதீன மற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து இந்த ‘தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தை’ நாம் நிறுவியுள்ளோம்.

இந்த மத்திய நிலையம் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தொழிற்சங்க சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.” – என்றார்.

Previous Post

சூழ்நிலை சீரடைந்ததும் மேலும் பல நிவாரணங்கள்.!

Next Post

கொட்டகலை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா.!

Related Posts

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

by Mathavi
July 7, 2026
0

கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவிற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வாழைச்சேனைப் பொலிஸார்...

மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு; கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி.!

மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு; கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; யாழ். சிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றம்.!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; யாழ். சிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றம்.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக்...

அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்.!

அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்.!

by Mathavi
July 7, 2026
0

தற்போதைய அரசின் நிர்வாகக் குறைபாடுகள், நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மரணங்கள் மற்றும் டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் தோல்விகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது....

நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகளுக்கு 14 உறுப்பினர்கள் எதிர்ப்பு.!

நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகளுக்கு 14 உறுப்பினர்கள் எதிர்ப்பு.!

by Mathavi
July 7, 2026
0

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் அவர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் இன்று (07)...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது.!

by Mathavi
July 7, 2026
0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் கீழ் வரும் ஃபேர்லோன் தேயிலை தோட்டத்தின் சின்ன சூரியகந்த பகுதியில் வசித்து வரும் 62 வயதுடைய நபர் நேற்று மீட்டியாகொட விவசாய நிலப்...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம்; கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

by Mathavi
July 7, 2026
0

மன்னார் - மடுகல்வி வலயத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சீர்செய்வதற்குரிய, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருந்தொகையான சீனி கைப்பற்றல்; நால்வர் கைது.!

நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருந்தொகையான சீனி கைப்பற்றல்; நால்வர் கைது.!

by Thinakaran
July 7, 2026
0

பேலியகொடை - பெதியாகொடை பகுதியில் நுகர்வுக்குப் பொருத்தமற்ற 4,250 தொன் சீனித் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவலை, அங்கொடை, பிலியந்தலை...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதியமைச்சர்.!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதியமைச்சர்.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்,...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி