இளம் யுவதி ஒருவரை காணவில்லை.!
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் 19 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர்களால் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவதர்சன் தமிழ்வினி என்ற பெண்ணே காணாமல் போயுள்ளார்.
குறித்த யுவதி கடந்த 27ஆம் திகதி காணாமல் போயுள்ளதாகவும் பல்வேறு பகுதிகளிலும் தேடிய போதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0766859799, 0773104228 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

