மத்திய கிழக்கு மோதலின் போதும் இலங்கையில் பண அனுப்புதலில் பாதிப்பு இல்லை – மத்திய வங்கி.!
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களின்போதிலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நடவடிக்கைகள் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று இலங்கை மத்திய வங்கியின் .ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய மோதலினால் மத்திய கிழக்கிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சுமார் 17% குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், மத்திய வங்கி நாணயக் கொள்கைச் சபை நேற்று (24) தனது கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 7.75% நிலைமையில் பேணும் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இலங்கையின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு 2026 பெப்ரவரி மாத இறுதியில் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.