போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது.!
ஹட்டன் நகரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகரில் ஆங்கில மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் மருந்தகத்தில் வைத்தியரின் அனுமதிச்சீட்டு இன்றி போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
அதற்கு தலைமை வகித்த ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர குறித்த ஆங்கில மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து 1400 போதை மாத்திரைகள் கைப்பற்றி உள்ளனர்.
மருந்தக உரிமையாளரை ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
