உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பெண் போதைப்பொருள் கடத்தல்காரியின் சொத்துக்கள் முடக்கம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் (30 கோடி) ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு இந்தச் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் பெருமளவு சொத்துக்களைச் சேர்த்துள்ளார் என்று கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுக்கமைய இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

முடக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்கள் வருமாறு:-

  • கொழும்பு 14 மற்றும் ஜா – எல பகுதிகளில் அமைந்துள்ள சொகுசு வீடுகள்.
  • நான்கு கடைத் தொகுதிகள் மற்றும் பெறுமதிமிக்க காணிகள்.
  • 59 இலட்சம் (5.9 மில்லியன்) ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருந்த ஆறு வங்கிக் கணக்குகள்.

மேலதிக விசாரணைகளின் போது, வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 30 மில்லியன் (3 கோடி) ரூபா பெறுமதியான மற்றொரு சொகுசு வீடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டை 2026 மார்ச் 20 முதல் ஏழு நாட்களுக்கு முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான பெண்ணின் ஏனைய சொத்துக்கள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

33 0 0