உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இலங்கையில் கோரத்தாண்டவமாடும் வீதி விபத்துக்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவான விபத்துக்கள் தொடர்பான தரவுகளிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக 3 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

மிக மோசமான 405 விபத்துச் சம்பவங்களில் சிக்கி 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

866 விபத்துச் சம்பவங்கள் பாரதூரமானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

1,730 விபத்துச் சம்பவங்களில் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

641 விபத்துக்களில் வாகனங்கள் மற்றும் ஏனைய உடமைகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பெறுமதியான மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் வீதி ஒழுங்குமுறைகளையும், பாதுகாப்பு நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிவேகம், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துதல் மற்றும் வீதி விதிகளை மீறுதல் போன்றவையே இவ்வாறான விபத்துக்களுக்குப் பிரதான காரணங்களாக அமைவதாகவும் பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

55 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0