உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிவனடிபாத மலைக்கு அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிவனடிபாத மலை பருவகாலத்தில் டித்வா புயலின் காரணமாக யாத்திரிகர்கள் வருகை வீழ்ச்சி அடைந்தது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் வருகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை, நாளை பௌர்ணமி தினம் என்பதாலும் அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை தந்த நிலையில் உள்ளனர்.

மேலும், யாத்திரிகர்கள் வருகை தந்த வாகனங்கள் நல்லதண்ணி நகரில் உள்ள தரிப்பிடங்களில் நிரம்பி நல்லதண்ணி மரே சாலையிலும் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான சாலையிலும் சுமார் ஆறு கிலோமீற்றர் தூரம் வரை நிறுத்தப்பட்டுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் நலன் கருதி அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் மதுபோதை மற்றும் போதைப்பொருட்கள் கொண்டு வரும் நபர்களை அடையாளம் காண வீதி தடை இட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் கூறினார்.

மலை உச்சிக்கு செல்லும் வழியில் அதிக அளவில் யாத்திரிகர்கள் செல்வதால் யாத்திரிகர்கள் வழிபட தாமதம் ஏற்படும் அபாயமும் உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

64 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

41 0 0