உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பருத்தித்துறை கடலில் மாயமான இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

யாழ். வடமராட்சி வடக்கு, பருத்தித்துறைக் கடலில் மீன்பிடி நடவடிக்கையின் போது தவறி விழுந்து காணாமல்போன தொழிலாளி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
பருத்தித்துறை கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குத் தொழிலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது, அவர்கள் சென்ற படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியுள்ளது. அதனைச் சீர்செய்ய முற்பட்ட போது, படகிலிருந்த ஒரு தொழிலாளி எதிர்பாராத விதமாகத் தவறி கடலில் விழுந்து அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவருடன் சென்ற சக தொழிலாளி வழங்கிய தகவலைத் தொடர்ந்து, பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் உடனடியாகத் தேடுதல் பணியில் இறங்கினர். சுமார் 25 இற்கும் மேற்பட்ட படகுகளில் சிதறிச் சென்று தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் அந்தத் தொழிலாளியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டது.

இச்சம்பவத்தில் பருத்தித்துறை, கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (வயது 23) என்ற ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

23 வயதான இளம் தந்தை ஒருவரின் உயிரிழப்பு பருத்தித்துறை – கொட்டடி மீனவக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

64 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

42 0 0