உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு கிடையாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற பீதியடைய வேண்டாம் என மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சிய முனையமானது வழமைபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும். இதனால், மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிலையங்களுக்கும் நாளை திங்கட்கிழமை முதல் வழமை போன்று பெற்றோல் விநியோகிக்கப்படும்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் நேற்று நான் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு கலந்துரையாடினேன். இதன்போது, நாட்டுக்குத் தேவையான ஒரு மாதத்திற்கும் அதிகமான காலத்திற்குப் போதுமான பெற்றோல் கையிருப்பில் இருப்பதாக அவர் என்னிடம் உறுதிப்படத் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து நிலவும் வதந்திகளை நம்பித் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க முற்பட வேண்டாம். யாழ். மாவட்டத்திற்குத் தேவையான எரிபொருள் விநியோகம் சீராக முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

39 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

61 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

39 0 0