உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஈரானில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க விரைந்து செயற்படுக.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இஸ்ரேல் – ஈரான் இடையிலான தீவிர இராணுவ மோதல்களை அடுத்து, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் உயிரைப் பாதுகாக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசு உடனடியாக இராஜதந்திர ரீதியிலான மற்றும் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலன் கருதி அரசு கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.” – என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சஜித் பிரேமதாஸவின் இந்தப் பதிவு முக்கியத்துவம் பெறுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

39 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

61 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

39 0 0