உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து; இரு இளைஞர்கள் மாயம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளனர்.

நேற்று மாலை லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்ற போதே எதிர்பாராத விதமாக இந்தப் படகு கவிழ்ந்துள்ளது.

இதில் பயணித்த 18 வயதுடைய இரண்டு இளைஞர்களே நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போன இளைஞர்களைக் கண்டறியும் பணிகளுக்காக திஸ்ஸமஹாராம கடற்படைப் பிரிவு மற்றும் விசேட சுழியோடிகள் பிரிவு என்பன இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை இளைஞர்கள் குறித்த எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

39 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

61 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

39 0 0