உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கச்சதீவில் நிலவிய அசாதாரண சூழல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இம்முறை வரலாற்றுச் சாதனையாக 13 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்புடன் நிறைவடைந்தது. இருப்பினும், திருவிழா நிறைவு பெற்று பக்தர்கள் கச்சதீவிலிருந்து வெளியேற முற்பட்ட போது பாரிய சனநெரிசல் ஏற்பட்டது.

நேற்று காலை நடைபெற்ற கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் பெருமளவு பக்தர்கள் தத்தமது ஊர்களுக்குத் திரும்புவதற்காகப் படகுத் துறையை நோக்கி விரைந்தனர்.

பெருமளவு மக்கள் ஒரே இடத்தில் திரண்டதால், படகு ஏறும் பகுதியில் நீண்ட வரிசைகளும் தள்ளுமுள்ளு நிலையும் காணப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த பக்தர்கள் அனைவரும் குறுகிய காலப்பகுதிக்குள் கச்சதீவிலிருந்து வெளியேற முயன்றமையே இந்த நெரிசலுக்குப் பிரதான காரணமாக அமைந்தது.

கடும் வெயிலுக்கு மத்தியில் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த நெரிசலால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

கடற்படையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இம்முறைத் திருவிழாவானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையில் திருப்பலிகள் இடம்பெற்றன.

இலங்கை மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

39 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

61 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

39 0 0