சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
சிவனடிபாத மலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று மதியம் 3.30 மணியளவில் நோட்டன் லக்சபான பகுதியில் இடம்பெற்றுள்ளது என நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் மேலும் கூறுகையில்,
சிவனடிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் மீண்டும் காலி பகுதியில் உள்ள தங்களது வீட்டிற்கு திரும்பிய வேளையில் நோட்டன் லக்சபான பகுதியில் காரானது வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் காரில் சென்ற நான்கு பேரில் மூவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் லக்சபான கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முதற் கட்ட விசாரணையில் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்து நோட்டன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

