உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

அனோஜன் விடயத்தில் அரசு மந்தப்போக்கு! : ஜனாதிபதி நேரடியாகத் தலையிடவேண்டும் என முஜிபுர் ரகுமான் வலியுறுத்தல்!!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
24 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசின் தலையீடுகள் மிகவும் மந்த கதியிலேயே உள்ளன என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இத்தகையதொரு விவகாரத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சரை விட ஜனாதிபதி அல்லது பிரதமர் நேரடியாகத் தலையிடுவதே பொறுத்தமானது என்றும் வலியுறுத்தினார்.

சிவராசா அனோஜன் விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னெடுப்புகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சவூதி அரேபியாவின் அரச தீர்மானத்துடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில் தற்போதைய இலங்கை அரசின் தலையீடுகள் மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றன.

பிரதி வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டால் எந்தவொரு பலனையும் எதிர்பார்க்க முடியாது என்பதால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அல்லது பிரதமர் ஹரிணி அமரசூரியவாவது இதில் நேரடியாகத் தலையிட வேண்டும்.

சவூதி நாட்டின் சட்டங்கள் குறித்த அறிவின்றி மேற்படி இளைஞர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தவறாக இருக்கலாம். எனினும், அவர் மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது பணிவான கோரிக்கையாகும்.

பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவகாரத்தில் முழுமையான கவனம் செலுத்தியுள்ளது. தனிப்பட்ட ரீதியிலும் இதற்காக நான் செயற்படவுள்ளேன்.

அதற்கமைய, சிவராசா அனோஜனுக்கான பொதுமன்னிப்பைக் கோரி, கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத்திடம் எழுத்துமூலம் நான் நேரடியாகக் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.

இந்த வாரத்துக்குள் அந்தக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளிக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜன் மற்றும் திலீபனின் வெண்கலச் சிலை தொடர்பில் ‘சிங்ஹல ராவய’ அமைப்பு கருத்து

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலை…

24 0 0
இலங்கை செய்திகள்

புற்றுநோய் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகள் : தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மீது விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்…

23 0 0
இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பில் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் அமையவிருக்கும் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின்…

26 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சிறீதரன் எம்.பி. ஜனாதிபதிக்குக் கடிதம்

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது குடும்பப் பின்னணியைக் கருத்திற்கொண்டு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க…

20 0 0