உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

நெல் கொள்வனவு செய்வதற்காக விண்ணப்பித்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு காசோலை வழங்கல்

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
34 பார்வைகள்

நெல் சந்தைப்படுத்தல் சபை தவிர்ந்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு நெல் கொள்வனவு செய்வதற்காக முதல் கட்டமாக மாவட்ட செயலகத்திற்கு 25மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக விண்ணப்பித்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான காசோலை வழங்கலும் அவர்களுடனான கலந்துரையாடலும் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப்பணிப்பாளர், கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பாக மாவட்ட அரசாங்கதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக, மாவட்டங்கள் தோறும் தனியார் மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்குத் தலா 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 10 அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்முதல் செய்யச் சம்மதம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
முதற்கட்டமாக 4 நபர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 பேருக்கு விரைவில் வழங்கப்படும்.

நாளையிலிருந்து நெல் கொள்முதலுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கான நடைமுறைகள்:

நெல்லை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி ஆலையில் நெல் மாதிரியைச் (Sample) சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

அனுமதி பெற்ற பின், கமநல சேவை மையத்தில் (ARPA / APC) தங்கள் பெயரினைப் பதிவு செய்து கொள்முதலுக்கான அனுமதியைப் பெறலாம்.

எனவே, விவசாயிகள் விரைவாகத் தங்கள் பகுதிக்குரிய அரிசி ஆலைகளை அடையாளம் கண்டு, மாதிரிகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

யாழ் மாவட்டத்திலிருந்து 13 அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்முதல் செய்யச் சம்மதம் தெரிவித்துள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், அவர்கள் எந்தெந்தப் பிரதேசங்களில் கொள்முதல் செய்ய முடியும் என்பது குறித்த ஒதுக்கீடுகள் விரைவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காலணிகளுக்குள் போ@தைப்பொருள்: சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது

காலணிகளுக்குள் போ@தைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,…

27 0 0
இலங்கை செய்திகள்

செப்டெம்பர் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவு குறித்த அறிவிப்பு

செப்டெம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை…

25 0 0
இலங்கை செய்திகள்

டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல்!

வாடகை செலுத்தத் தவறியதற்காக, ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல் வைக்க இன்று 14.09.2026 ம் திகதி அன்று ஹட்டன் டிக்கோயா…

29 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரம் 2026 ஆரம்பம்!

“வளமான நாடு – அழகான வாழ்வு” மற்றும் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று (14) திருக்கோவில் பிரதேச சபையில்…

31 0 0