உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

முற்று முழுதாக கைவிடப்பட்ட கொடித்தோடை செய்கை.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
34 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின்(ASMP) கீழ் மேற்கொள்ளப்பட்ட கொடித்தோடை செய்கை முற்று முழுதாக கைவிடப்பட்டுள்ளதுடன் அதற்கென நிறுவப்பட்ட அலுவலகம் குளிரூட்டி மற்றும் உபகரணங்கள் என்பனவும் பயன்பாடு இன்றி காணப்படுகின்றது.

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சினால் நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் (ASMP)கீழ் விவசாய உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் அந்நிய செலவாணியை நாட்டுக்கு ஈட்டும் வகையிலே உலக வங்கி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் நிதி பங்களிப்பின் கீழ் பலகோடி ரூபாய் செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் உற்பத்தியை மையமாக கொண்டு முதற் கட்டமாக 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ஏழு இலட்சத்து 55ஆயிரம் ரூபாய் பெறுமதியான விவசாய உள்ளீடுகள், நீர் இறைக்கும் இயந்திரம், கொடிகளை கம்பிகள், பராமரிப்பதற்கான நிலம் பண்படுத்தல் என பல்வேறு செயல்திட்டங்களுக்காக வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து மீளவும் 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உள்ளீடுகளும் வழங்கப்பட்டு குறித்த பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன் செய்கை மூலம் கிடைக்கின்ற உற்பத்தியை விவசாயிகளிடம் உரிய விலைகளில் கொள்ளளவு செய்து அவற்றை முடிவு பொருளாக்கி ஏற்றுமதி செய்வதற்குரிய சகல வசதிகளையும் கொண்ட வகையில் அக்கராயன் குளம் பகுதியில் மாகாண விவசாய திணைக்ககளத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியில் 85.11மில்லியன் செலவில் அதற்கான பதப்படுத்தல் நிலையம், அலுவலகம், குளிரூட்டி வசதி என்பன நிறுவப்பட்டு அவையும் இன்று கைவிடப்பட்டு காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டமானது மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஒரு நிதி பங்களிப்பின் கீழான திட்டமாக நிறுவப்பட்ட போதும் இன்று வருமானங்கள் எதுவும் இன்றி இத் திட்டம் முற்று முழுதாகவே கைவிடப்பட்டு காணப்படுகின்றது.

குறிப்பாக முறைகேடான பயனாளிகள் தெரிவு மற்றும் மாகாண விவசாய திணைக்களத்தின் அசமந்த போக்கு என்பன இத்திட்டம் செயலிழக்க காரணமென பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காலணிகளுக்குள் போ@தைப்பொருள்: சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது

காலணிகளுக்குள் போ@தைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,…

27 0 0
இலங்கை செய்திகள்

செப்டெம்பர் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவு குறித்த அறிவிப்பு

செப்டெம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை…

25 0 0
இலங்கை செய்திகள்

டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல்!

வாடகை செலுத்தத் தவறியதற்காக, ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல் வைக்க இன்று 14.09.2026 ம் திகதி அன்று ஹட்டன் டிக்கோயா…

29 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரம் 2026 ஆரம்பம்!

“வளமான நாடு – அழகான வாழ்வு” மற்றும் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று (14) திருக்கோவில் பிரதேச சபையில்…

30 0 0