போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!
கலுகலை பகுதியில் உள்ள வீதித் தடை சோதனை சாவடியில் ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு கித்துல்கல பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை கலுகல பகுதியில் உள்ள வீதித் தடை சோதனை சாவடியில் வைத்து பொல்பிட்டிய பொலிஸார் சோதனை செய்த போது சாரதியிடம் இருந்து ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சந்தேகத்தின் பேரில் டிக்கோயா வணராஜா கீழ் பிரிவைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சோதனையின் போது ஜஸ் போதைப்பொருள் 03 கிராம் 44 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.