உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

அரசமைப்பு பாதுகாப்புகளை வலுப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
43 பார்வைகள்

அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப் பார்வையுடனான தேசிய உரையாடல் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரூவுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எந்தவொரு அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசமைப்பு நிறுவனங்கள் நம்பகத்தன்மையுடனும் சுயாதீனமாகவும் இயங்கக்கூடிய வகையில் நிறுவனக் கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அரசமைப்பு சீர்திருத்தங்கள் தற்போதைய அரசியல் தேவைகளுக்காக அல்லாமல், அதிகாரம் மாறும் சந்தர்ப்பத்தில் கூட மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீன அரசமைப்புச் சார் நிறுவனங்களைப் பாதிக்கும் சீர்திருத்தங்களுக்குப் போதுமான பாதுகாப்பு விதிகள், வெளிப்படைத்தன்மை மற்றும் அர்த்தமுள்ள பொதுமக்கள் கலந்தாலோசனைகள் அவசியம் என்பதுடன், நீதித்துறையின் சுதந்திரம் என்பது நீதிபதிகளின் சிறப்புரிமை அல்ல, மாறாக மக்களின் மற்றும் அரசமைப்பு ஆட்சி முறையின் பாதுகாப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்கும் போது பொதுநலவாயக் கோட்பாடுகளை முக்கியமான சர்வதேச அளவுகோலாகப் பயன்படுத்தலாம் என அவதானிக்கப்பட்டதுடன், தற்போதைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் செல்வாக்கு செலுத்தாமல் நீண்டகால அரசமைப்பு சீர்திருத்தமாக விசேட அரசமைப்பு மீளாய்வுப் பொறிமுறை தேவையா என்பதைப் பரிசீலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சுற்றாடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் சுற்றாடல் நீதியை வலுப்படுத்துவதற்கும் பொதுநலவாய நாடுகளின் அனுபவங்களை ஆராய்ந்து பொருத்தமான மாதிரியைத் தேர்ந்தெடுக்க விருப்பமும் தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு இந்தியத் தூதுவர் விளக்கம்.!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆசிகளைப்…

61 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று…

63 0 0
இலங்கை செய்திகள்

22 ஆம் திருத்த விசாரணைகள் குறித்து கொமன்வெல்த் சட்டத்தரணிகள் விசனம்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண அல்லது முழுமையான நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு, பொதுநலவாய (கொமன்வெல்த்)…

18 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர் ஆகியோர் இலங்கை விஜயம்.!

அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலுள்ள சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க –…

71 0 0