உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
111 பார்வைகள்

பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை செப்டம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சுகயீனம் காரணமாக சக்கி அதாஉல்லா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் இன்று நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்படவில்லை.

சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளைப் பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று மாநகரசபையின் மேயராக சக்கி அதாஉல்லா பதவி வகித்த காலப்பகுதியில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரை பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சமூக வலைத்தளமான பேஸ்புக் நேரலையின் ஊடாக குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சந்தேகநபரை ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் ஆகஸ்ட் 19ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விளக்கமறியல் செப்டம்பர் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சந்தேகநபரின் விளக்கமறியல் செப்டம்பர் 09ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

210 0 0
அம்பாறை செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் புகும் யானைகள்; மக்கள் பீதியில்.!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர…

198 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸாரின் அதிரடி வேட்டை; ஹெரோயினுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை…

188 0 0
அம்பாறை செய்திகள்

அம்பாறையில் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் நேற்று…

109 0 0