AI தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட ஆபாச புகைப்படம் : சுருதி ஹாசன் வழக்குத் தாக்கல்!
நடிகர் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தனது நிழற்படம், குரல் மற்றும் அடையாளம் போன்றவை செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது முகத்தை மாற்றியமைத்து, ஆபாசமான மற்றும் விரும்பத்தகாத நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று தன்னை ஆபாசமாகச் சித்தரிக்கும் உள்ளடக்கங்களை உருவாக்கி பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள அவ்வாறான நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தனது அனுமதியின்றி தனது பெயர், நிழற்படம் மற்றும் குரல் ஆகியவை வணிகப் பயன்பாடு மற்றும் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது அடையாளம் மற்றும் ஆளுமை உரிமைகள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஸ்ருதி ஹாசன், இதற்குக் காரணமானவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.